Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
நானும் எத்தனையோ தடவ blog பண்ண முயற்சி செஞ்சி, அப்றம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி அப்டியே விட்டிருக்கேன். ஆனால் தமிழ்ல blog பண்ண ஆரம்பிச்சப்றம் தான் தொடர்ந்து எழுதலாமேன்னு தோண்றது. நினைக்க்ற விஷயத்த அப்டியே சொல்ல தமிழ்ல தான் முடிது. புதுசு புதுசா எழுத matter கிடைக்குது. எனக்கு எழுதணும்ங்க்ற ஆசையும் பூர்த்தி ஆகுது. இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன். local matter-லேர்ந்து சர்வதேச பயங்கரவாதம் வரைக்கும் எல்லாமே எழுதலாம். நான் எழுதணும்னு நெனச்சு எழுதாம விட்ட கதை, கவிதை, எல்லாமே எழுதலாம். தமிழ் Unicode கோடிங் முறைக்கு ஒரு ஓ!!! போடலாம். அதுலையும், phonetic கீபோர்டு யூஸ் பண்றது, இதுக்கு முன்னால நான் யூஸ் பண்ணிட்டிருந்த தமிழ் typewriter கீபோர்டை விட சூப்பரா இருக்கு. ஈசியா எழுத முடிது. இத்தனை நாளா இது தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு. Anyway, இனி என்றுமே வெற்றி தான். வாழ்க தமிழ்! வாழ்க யூனிகோடு!!
//இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன்.//
தீபக்,
இது மிகமிக முக்கியம். உங்க ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள்.
நண்பனே தொடர்ந்து எழுதுங்கள்!
நண்பனே தொடர்ந்து எழுதுங்கள்!
வாங்கய்யா வாங்க!!!! எழுதுங்கையா எழுதுங்க!!!!
( எல்லாம் நேத்து ‘ஐயா’ படம் பார்த்ததால் வந்த கோளாறு!)
என்றும் அன்புடன்,
துளசி.
வலைப்பதிவுலகிற்கு நல்வரவும் வாழ்த்துகளும்.
வலைப்பதிவைத் தொடங்கிய உடனேயே இத்தனை வறவேற்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மிக்க நன்றி. தொடர்ந்து எழுத இது நல்ல ஊக்கமாக இருக்கிறது.
March 9, 2005 at 7:35 pm
வாங்க தீபக் வெங்கடேசன்,
தமிழ்மணம்(http://www.thamizmanam.com) வலைத்தளத்தில் உள்ள ஸ்டார் ரேட்டிங் முறையை உங்களது வலைப்பதிவில் சேருங்கள்.