Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
நேற்று காலையில் 'தினமணி' படிக்கும் போது, மதியின் 'அடடே!' column கண்ணில் பட்டது. இப்பத்தான்யா பீஹார் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள் – குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கிறது. அவர் தான் பீஹாருக்குச் சரியான ஆள் – என்று இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பது போல cartoon போட்டிருந்தார். அதுவும் வாஸ்தவம் தான். எங்களைத் தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று லாலு, பாஸ்வான், பாஜக என்று எல்லோருமே கவர்னரை வேண்ட, கடைசியில் ஆட்சி அமைத்ததோ குடியரசுத் தலைவர் தான். ஒழுங்கான ஆட்சி அமைந்த மத்தியிலும் மாநிலத்திலும் மன்றங்கள் எப்படி நடக்கின்றன என்பது நாடறிந்த விஷயம். நாங்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்த விட மாட்டோம் என்று ஒரு கட்சி முழங்குகிறது. கடைசியில் நஷ்டப்படப் போவது யார்? மக்கள் தானே? ஜனநாயகத்தில் எல்லோருமே மன்னர்கள். மன்னர்களின் அட்டகாசம் தாங்கமுடியலைப்பா…! கடவுளே, மன்னர்கள் இருக்கட்டும். மக்களை யாராவது காப்பாற்றுங்களேன்!