Amusingly Simple

Archive for the ‘அனுபவம்’ Category

கடைசியில் ஒரு வழியாக, என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மிகுந்த ஆரவாரம், மேளதாளம், பாராட்டுகள், பரிசுகள், கூத்து, பாட்டு என்று கல்லூரியே அமர்க்களப்பட்டு விட்டது என்று சொன்னால், அது சத்தியமாகப் பொய்தான். நான்கு ஆண்டுகளில் இதுவரை எழுதிய அறுபது பேப்பர்களில், கட்டக்கடைசியான பேப்பரை முடித்த நிறைவோடு, அதன் சாதக-பாதகங்களை டிஸ்கஸ் செய்துகொண்டே, நண்ப-நண்பிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஸ்ட்யூடண்ட் வாழ்க்கையிலிருந்து, க்ராஜுவேட் வாழ்க்கைக்கு இப்பொழுதுதான் ப்ரொமோட் ஆகியிருக்கிறதால், இந்தப் புதிய அவதாரத்தின் கடமை, கண்ணியம், [...]

இஞ்சினீயரிங் கல்லூரி

Posted by: Deepak Venkatesan on: April 10, 2005

ஒரு நாளைக்கு 30 மணி நேரம் இருந்தால் கூடத் தேவலாம். கல்லூரி project work-இன் அடங்காத் தாண்டவங்களுக்கிடையே எழுதுவதற்கு சமயம் கிடைப்பது – கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைப்பது போல் ஆகிவிட்டது. இப்போது பருவமழை – அதுதான் எழுத சமயம் வாய்த்தது. எழுதுகிறேன்… நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவித்தனமான ஃபர்ஸ்ட் இயர் பையனாக கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து, பல சமாசாரங்களிலும் மேதாவிலாசம் பெற்று 'அடப் பாவி!' த்தனமான ஃபைனல் இயராக உருமாறியிருக்கும் இன்று வரையில் நான் செய்ததெல்லாம், சில foreign [...]

சில முயற்சிகள்…

Posted by: Deepak Venkatesan on: March 19, 2005

எனது நண்பர் கவிஞர் புரட்சித்தேனீ எழுதிய கவிதை ஒன்றில் இந்த வரிகள். நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று யாரும் வீட்டில் நரி வளர்ப்பதில்லை. பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்று யாரும் வீட்டில் பூனை வளர்க்கத் தயங்குவதில்லை. விசாரித்துப் பார்த்ததில், தம்மிடம் யாரோ சொன்னதாகச் சொன்னார். இருந்தாலும், தினம் தினம் இப்படிப்பட்ட ஹாஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. நாமெல்லாம் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறோம் என்பது எனக்கு இன்னும் விளங்கியபாடில்லை. அமாவாசை அன்று காக்கைக்குப் படையல் வைக்க ஒரு [...]

எனக்கு ‘நீலா’ வேண்டும்!

Posted by: Deepak Venkatesan on: March 12, 2005

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சிருங்கேரி சென்றிருந்தேன். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எனக்கு, கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருந்த அந்தச் சிறிய ஊரில் எங்கு பார்த்தாலும் வயலும் வரப்பும் வாய்க்காலுமாய் இருக்கும். நண்பர்களோடு ஆற்றில் குளிப்பது, காட்டில் அலைவது, சந்தைக்குச் செல்வது என்று பொழுது போனது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம். சரியான சாப்பாட்டு ராமனான எனக்கு, அத்தை விதம் விதமாகப் [...]

நான் செல்லரித்துப் போன கதை

Posted by: Deepak Venkatesan on: March 10, 2005

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு ஒரு சின்ன ஆசை. ஒரு மாடர்ன் பிகருக்கு பிராக்கட் போட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் கூடச் சுலபமாக நிறைவேறியிருக்கும். ஆனால் நான் ஆசைப்பட்ட விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அது என்ன ஆசை என்கிறீர்களா? வேறொன்றுமில்லை… ஒரு செல்லுலர் போன் வாங்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு. வெற்று டாம்பீகம் எதற்கு என்று அடக்கமாக இருந்த எனக்கு, எல்லோரும் செல் வைத்துக்கொண்டு, காற்றோடு கதைபேசுவதைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் [...]


Deepak Venkatesan

  • Deepak: The same is true for e-stamping also. Type as much as possible on the page-1 and the rest on the next page. Authorities expect that the contents star
  • suchintya: hi Deepak, I think you misread the query. I am asking about estamping and not the normal stamp paper agreement. After I have received the estamp pa
  • Deepak: Start right on the first page where you got the franking done, and where the registrar has signed. Even if the space is small here, start from the fro